வெள்ளி, 1 ஜனவரி, 2016

சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது - கோ.ஜெயக்குமார்.

சந்திரனுக்கு மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட நாள்: 21-12-1968

சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக மனிதர்களை அனுப்பும் ‘அப்போலா விண்வெளி திட்டத்தை’ ஆரம்பித்த அமொக்கா, தொடர்ந்து விண்கலங்களை அனுப்பியது. மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி பாதுகாப்பாக கொண்டு வருவதுதான் இதன் நோக்கம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சியின் வரிசையில், 2-வது திட்டமான அப்போலோ-8 விண்கலம் புளோரிடாவில் இருந்து 1968-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் தான் மனிதர்களை சுமந்து சென்று முதல் முறையாக பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து, பூமியின் நிலவு வட்டப்பாதையை அடைந்த விண்கலம் ஆகும். அதன்பின்னர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

இதில் பிராங் போல்மேன், ஜேம்ஸ் லோவல், வில்லியம் ஆண்டர்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பயணித்தனர்.

இதே டிசம்பர் 21ம் தேதியின் சில முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1902 - இலங்கையில் போவர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1913 - உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.

1967 - உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் நாஷ்கான்ஸ்கி சிகிச்சை பெற்று 18 நாட்களில் இறந்தார்.

1973 - அரபு-இஸ்ரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பம்.

1992 - டச்சு விமானம் ஒன்று போர்ச்சுக்கலில் விழுந்து நொறுங்கியதில் 56 பேர் பலி.

1995 - பெத்லேகம் நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2007 - பாகிஸ்தானின் பெஷாவர் நகர் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் சாவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக