வெள்ளி, 18 ஏப்ரல், 2014

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணமடைந்த நாள்: ஏப்ரல் 18, 1955 - கோ.ஜெயக்குமார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணமடைந்த நாள்: ஏப்ரல் 18, 1955
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டு கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் 1879-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராக கருதப்படுகிறார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணமடைந்த நாள்: ஏப்ரல் 18, 1955
இவர் புகழ்பெற்ற சார்பு கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார். 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் ஐன்ஸ்டைன் மரணமடைந்தார்.
ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாடு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப்பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999-ல் புதிய ஆயிராமாவது ஆண்டை குறித்து வெளியிடப்பட்ட டைம் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதன் என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக