சனி, 6 ஜூலை, 2013

பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது - கோ.ஜெயக்குமார்

 பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது
பிபிசி நிறுவனம் பிரிட்டிஷ் அரசின் பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் என்ற பெயர்கொண்ட இது கடந்த 1927-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது
இந்நிறுவனம் வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இதன் தலைமையகம் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை இந்நிறுவனம் சேகரித்து வழங்குகிறது.

உலகின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிபிசி 1954 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி தனது முதல் தொலைக்காட்சி செய்தியை ஒளிபரப்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக