திங்கள், 29 ஏப்ரல், 2013

நடிகை விஜயலட்சுமியின் கதை



திரைப்பட துறை என்பது மிகச்சாதாரண மக்கள் முதல் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் பணக்காரர்கள் வரையில் அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், பெண்களும் திரைப்படத்துறையின் மீது இருக்கும் மோகத்தினால் கதாநாயகன்,  கதநாயகி, இயக்குனர் என்று ஏதாவது ஒரு கனவோடு சென்னையை நோக்கி படையெடுக்கிறார்கள்.
சென்னை வந்தவுடன் திரைப்படத்துறை சார்ந்த பிரபலங்களை இவர்கள் சந்திப்பது என்பது சவாலான ஒன்று. அப்படியே சிலரஈ சந்திக்கும் வாய்ப்புகள் கிட்டினாலும், இவர்களைப் பற்றியெல்லாம் பிரபலங்களுக்கு சிந்திக்க கூட நேரமில்லை.அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள் என துன்பப்பட்டு கிடப்பதை விட கிடைக்கின்ற வேலையை செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.
இன்னும் சிலரோ எப்படிப்பட்ட துன்பம் நேர்ந்தாலும் சாதிது விடலாம் என்று, கனவுக் கோட்டடை கட்டிக்கொண்டு தங்குவதற்க்கு கூட இடமில்லாமல், பூங்காக்களிலும், சுரங பாதைகளிலும், ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், உறங்கிவிட்டு பீடி, சிகரெட், குடிப்பழக்கம் என பல தீய பழக்கஙளுக்கு அடிமையாகி வாழ்க்கையயே தொலைத்து விட்டு நிற்பார்கள்.
திரைப்படத்துறை என்பது பணம் படைத்தவர்களுக்கும், திரப்படத்துறையை தாங்கி பிடித்திருப்பவர்களுடைய குடும்ப வாரிசுகள் என புரையோடிப் போயிருக்கும் அந்த துறையில் சாதாரண பின்புலத்திலிருந்து வந்து சாத்திதவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஊரில் இருந்து கொன்ண்டு வந்த நகைகளையும் பணத்தையும் சிலர் இழந்துவிடுவார்கள். ஆனால், பெண்ணகளின் வாழ்க்கையோ சின்னபின்னமாகிவிடும். கனவை நிஜமாக்கிவிடலாம் என்ற கற்பனையால் நிஜ வாழ்க்கையை தொலைத்துவிட்டு துன்பத்தின் உச்சதிற்கே சென்ற பெண்கள் ஏராளம்.
சொந்த நாட்டில் பிறந்தவர்களுக்கே இந்த நிலமை என்றால் அரசாங்கத்தின் அச்சுறுத்தளுக்கு பயந்துக்கொண்டு  உயிர்பிழைத்தால் பொதும் என்று உறவுகளையும், உடைமைகளையும் இழந்துவிட்டு தப்பித்து வரும் நமது தொப்புள்கொடி உறவுகளுக்கும் இதுப்போன்ற ஆசைகள் இருக்கதான் செய்கின்றன. பட்ட காயத்திற்கு மருந்து போடுவதற்க்குள்ளாகவே சினிமாத்துறையில் தடம் பதிது விட வேண்டும் என்று போலிகள் சிலரிடம் ஏமாந்து விடுகிறார்கள்.
சமுதாயத்தில் அடையாளம் காணப்படும் நபராக வளர வேண்டும் என்று அடையாளம் தெரியாமல் போய்விடுகிறார்கள். இப்படிதான் கதநாயகியாக ஆக வேண்டுமென்ற கனவுகளோடு இலங்கை மண்ணிலிருந்து தமிழகத்திற்கு வந்த விஜயலட்சுமியினுடைய கதையை இப்போது பார்க்கலாம்.
இலங்கையை சேர்ந்த சின்னலட்சுமணனன் கமலா தம்பதிகளுக்கு குமார், சந்திரசேகர், ரமேஷ், லட்சுமி, நகராணி, அமுதா என்கிற விஜயலட்சுமி என்று ஆறு பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த குடும்பத்திற்கு தலை மேல் இடியாக வந்து விழுந்தது இலங்கையில் நடைப்பெற்ற போர். உயிருக்கு பயந்த்யுக்கொண்டு  சின்னலட்சுமணனன் கமலா தம்பதிகள் குழந்தைகளோடு 1990-ஆம் ஆண்டு மிக முக்கியமான மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் தஞ்சமடைந்தார்கள்.
இலங்கையில் செய்து வந்த தொழில், அசையா சொத்துக்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு வெறும்கையோடு வந்த இவர்கள் தினக்கூலிகளாக வேலை செய்து தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுத்தார்கள். திருவண்ணாமலை அருகே உள்ள கலசப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தார். இந்நிலையில் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட காலக்கட்டதில்  மீண்டும் இலங்கைக்கே திரும்பினார்கள்.
இலங்கையில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன், விஜயலட்சுமிக்கும் தர்மா என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. அங்கு அவர்களுக்கு கீர்த்தனா என்ற அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நேரத்தில் இலங்கையில் 2010-ஆம் ஆண்டு மீண்டும் போர் தொடங்கவே தந்தை சின்னலட்சுமணனும், சகோதரர் ரமேஷும் இறந்துவிடுகிறார்கள். இந்நிலையில் விஜயலட்சுமியும், அவரது கணவர் தர்மாவும் த்யனது கீர்த்தனாவுடன் கடல் மார்க்கமாக தப்பித்து தமிழகம் வந்தனர். மூன்று நாள் கடல் பயணத்தில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தன் குழந்தைக்கு கடல் நீரையே குடிநீராக கொடுத்ததாக உருக்கமாக கூறுகிறார் விஜயலட்சுமி.
தனது குழந்தை கீர்த்தனாவின் சட்டையை கழட்டி உதவிக்கு காட்ட, மீனவர்கள் அவர்களை ராமேஸ்வரம் கரைக்கு கொண்டுவதுள்ளனர். தனது தாய் கமலா, தாஙள் இலங்கையில் இருந்து தப்பி வந்தபோது நகை, பணம் தரவில்லை என்றும் அதற்கு பதிலாக உயிருக்கோ உடலுக்கோ ஆபத்து வந்தால் சயனைடை சாப்பிட்டு இறந்துவிடுமாறு கூறி அணிவித்ததாக கூறினார்.
தமிழர்கள் வாழும்போது மானத்தோடு வாழ வேண்டும், சாகும்போது வீரத்தோடு சாகவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படித்தான், விஜயலட்சுமியின் தாயாரும் கூறியுள்ளார். இப்படி வலி நிறைந்த பின்புலத்தைகொண்ட விஜயலட்சுமி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவில் சிங்கார சென்னைக்கு தனது கணவர் தர்மா மற்றும் கீர்த்தனாவுடன் சின்மயா நகரில் குடியேறினார்.
விஜயலட்சுமியின் கணவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். குழந்தை கீர்த்தனாவை ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு சினிமாவில் நடிப்பதற்கான வாஇப்பு கேட்டு பல இடங்களில் அலைந்து திரிந்துள்ளார். இந்த நேரத்தில் வடபழனி அருகே உள்ள திருநகர் பகுதியில், அழகிரி தெருவில் அமைந்திருந்த மாருதி மூவி மேக்கர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்பு கேட்டு சென்ற போது பாலமுருகன் என்பவர் அறிமுகமானார்.
விஜயலட்சுமியிடம் தன்னனை இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட பாலமுருகன் தான், ‘உயிரோடு விளையாடு’ என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதகவும், அதில் அவரை கதாநாயகியாக ஆக்குவதாக உறுதியளித்துள்ளார். எந்த பின்புலமும் இல்லாமல் சென்னை வந்த விஜயலட்சுமியை கதநாயகியாக ஆக்குகிறேன் என்ற பாலமுருகனின் பேச்சை வேதவாக்காக நம்பினார்.
விஜயலட்சுமியின் நம்பிக்கையை தனகு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட த பாலமுருகன், துளசி என்ற பெண்ணை திருமணம் செஇதுக்கொண்டு பாடியநல்லூரிலுள்ள முனீஸ்வரன் கோவில் தெருவிலுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தன் கீர்த்தனா, பரத் என்ற குழந்தைகளோடு வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமியை தன் வீட்டருகே குடி வந்தால் வாடகை குறைவாக இருக்கும் என்று அங்கேயே குடியேற செய்துள்ளார்.
ஒருநாள் விஜயலட்சுமியிடம் நான் உன்னை கதாநாயகியாக ஆக்குவதாக கூறிய ‘உயிரோடு விளையாடு’ திரைப்படம் பணம் நெருக்கடியால் தடைப்பட்டுள்ளது என்றும் அதற்கு விஜயலட்சுமி பணவுதவி செய்யுமாறு கூற, விஜயலட்சுமியும் தன்னிடமிருந்த நான்கு லட்சம் ரொக்க பணத்தையும், 15 பவுன் தங்க நகைகளையும் கொடுத்துள்ளார். நீண்ட நாட்கள் ஆன பின்பும் படம் பற்றி பாலமுருகன் வாயை திறக்காததால், அவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இந்த நெருக்கடியை சமளிக்க இரண்டு போஸ்டர்களை அடித்து கொண்டுவந்து விஜயலட்சுமியை சமாதனம் செய்துள்ளார்.
இலங்கையிலுள்ள விஜயலட்சுமியின் தாய் கமாலாவிற்கு இதய நோய் தாக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, அவரை பார்க்க இலங்கை செல்ல பாஸ்போர்ட் இல்லையென்று கூறியிருக்கிறார். உடனே இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாலமுருகன் தன்னை திருமணம் செய்து கொண்டால் பாஸ்போர்ட் எளிதாக கிடைத்துவிடுமென்றும், இதற்கு இடையூறாக அவரது கணவர் தர்மா இருந்தால் இரண்டு போலீஸ்காரர்களை வைத்து நைய்யப்புடைத்து விவாகரத்து வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.இதற்கு மறுப்பு தெரிவித்தவுடன் விஜயலட்சுமியை கத்தியால் குத்தி, இந்த விஷயங்களை வெளியே சொல்ல கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
உடனே அதிர்ந்த போன விஜயலட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, தனது கணவர் தர்மாவிடமும் இதை தெரிவித்திருக்கிறார். அடுத்தகட்டமாக பாலமுருகனின் சுயரூபம் வெளிப்பட்டவுடன் தான் கொடுத்த பணத்தையும் நகையையும் கேட்க துவங்கினார். ஆனால், பாலமுருகனோ பணத்தையும், நகையையும் கொடுப்பதாக இல்லை. மாறாக விஜயலட்சுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாலமுகனுடைய மிரட்டலுக்கு பயந்து போன விஜயலட்சுமி, சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் ஜார்ஜிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நான்கு லட்சம் ரொக்க பணத்தையும், 15 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொண்டு தன்னை கதாநாயகியாக ஆக்குவதாக கூறி ஏமாற்றியதாகவும், அதை மீட்டு தருமாறும் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி மறுநாள் நாளிதழ்களில் வந்தவுடன் பாலமுருகனால் பாதிப்படைந்த பலர் புகார் அளித்தனர்.
வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் ஞானராஜ் என்பவரிடமும், வங்கியில்  ஒன்றரை கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் சிவா என்ற தயாரிப்பாளரிடமும், தனக்கு ரயில்வே அதிகாரிகள் நண்பர்கள் அன்றும் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூரி ஜானகிராமன், மனோகரன் என்பவர்களிடம் தலா 15 லட்சமும், திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி அன்பரசு என்பவரிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றியிருப்பதாகவும் புகார்கள் குவிய தொடங்கியுள்ளன.
விஜயலட்சுமி ஏமாந்த பணத்தை அவரது கணவர் தர்மா கேட்டபோது விஜயலட்சுமியை கொலை செய்துவிடுவேன் என்றும், தன் ஒரு ரவுடி என்றும், தான் ஏற்கனவே ஒரு கொலை செய்திருப்பதாகவும் அதிரவைத்துள்ளார். அதோடு நில்லாமல் தன் பங்கிற்கு பாலமுருகனும் ஒரு புகார் மனுவை காவல்த்துறை ஆணையிரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் விஜயலட்சுமியுடன் தான் குடும்பம் நடத்தியதாக கூறி அதிரவைக்க, இதனை அறிந்த விஜயலட்சுமி தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கண்ணீரோடு தெரிவித்த விஜயலட்சுமி, தனக்கு பணம் பிரதானம் இலாஇயென்றும் மானம் தான் முக்கியம் என்று கூறிய அவர், பாலமுருகனை அண்ணன் என்று அழைத்துவந்த தான் எப்படி அவரோடு குடும்பம் நடத்தியிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, அடுக்கடுக்காக பாலமுருகன் பொய் கூறினால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கதறினார்.
வெளுத்துக்கட்டு, , ஆசாமி, விசுவாசம்,ஆகிய திரைப்படங்களிலும் வந்தாலே மகராசி, அவள் ஒரு மின்சாரம், ஆவிகள் ஆயிரம், விசாரணை, வைர நெஞ்சம், வைராக்கியம், திருமதி செல்வம், துளசி, வசந்தம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடதகுந்தது.
நடிகை விஜயலட்சுமி தனக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து ஸ்பைனல் கார்டு முறிந்து இல்லரத்தில் ஈடுபட முடியாது என்றும் அதற்கான மருத்துவ சான்றிதழ் தன்னிடம் இருப்பதாகவும், இப்படி இருக்கும்பட்சத்தில் பாலமுருகனுடன் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுப்பற்றி பாலமுருகனிடம் கேட்டபோது விஜயலட்சுமியின் புகார்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், விஜயலட்சுமிக்கு மருத்துவ உதவி முதல் அனைத்து உதவிகளையும் தான் தான் செய்துவந்ததாகவும் தன்னை விஜயலட்சுமி துன்புறுத்தியதகவும் கூறியுள்ளார். செய்திதாள்களில் தன்னைப்பற்றி செய்தி வந்ததால் குடும்பத்தினர் ஆவேசம் அடைந்துள்ளதாகவும் அதனால் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாகவும் சென்னை வந்த்தால் பெசுவதாகவும் அவர் பாலமுருகன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பு புகார்களை விசாரிக்கும்படி சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மாதவரம் துணை ஆணையருக்கு ஆணையிட்டுள்ளார். துணை ஆணையர் இந்த புகாரை செங்குன்றம் காவல் ஆய்வாளர் மாதேஸ்வரனை விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார். இரு தரப்பு விவாதன்களை விசாரித்த பின்னரே உண்மை தெரியவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக